பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: அரசுக்கு மா விவசாயிகள் கோரிக்கை
Krishnagiri Memes™![](/file/fa04bf0699de21586617a.jpg)
கிருஷ்ணகிரி: பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாங்கனி உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது. இங்கு, 40 ஆயிரம் ஹெக்டேரில், பெங்களூரா, பீத்தர், அல்போன்சா, மல்கோவா, செந்தூரா, காலப்பட், பங்கனப்பள்ளி உள்பட பல்வேறு ரக மாங்காய்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் மாங்கனிகள் வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
போதிய மழையின்றி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்த ஆண்டு, 50 சதவீதம் மட்டுமே மா விளைச்சல் உள்ளது. தற்போது, அறுவடை செய்யும் பருவத்துக்கு வந்துள்ள நிலையில், ஊரடங்கால், வெளிமாநில, மாவட்ட வியாபாரிகள் யாரும் வரமுடியாத நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் மாங்காய்களை அறுவடை செய்யாமல் மரத்திலேயே விட்டு வைத்துள்ளனர்.
![](/file/0a5a969f3db0b1de8b826.jpg)
இது குறித்து மா விவசாயிகள் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு போச்சம்பள்ளி, புலியூர், தாதம்பட்டி, மோட்டூர், வெண்றவள்ளி, சந்தூர் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், 20 டன் மாங்காய்கள் மரத்திலிருந்து உதிர்ந்தன. இவற்றை ஒரு கிலோ, நான்கு ரூபாய்க்கு கேட்கிறார்கள்.
இதனால், கூலி கூட கிடைக்கவில்லை. போதிய மழையின்றி டிராக்டர் மூலம் தண்ணீர் விட்டு மரங்களை பராமரித்தும் பலனில்லை. இதனால், மா விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மா விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
____
For more News & Instant Updates in & around Krishnagiri,
![](/file/93ba1c50a6759e92de149.png)