கொரோனா தொற்று அச்சம்..! தனிமைப்படுத்தப்பட்ட கிருஷ்ணகிரி நகரம்..!
Krishnagiri Memes™கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்கிய மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை வரை தொற்றில்லா பச்சை பகுதியாக இருந்த கிருஷ்ணகிரியில் 11 பேருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது . இதனால் கிருஷ்ணகிரி நகர்ப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநில எல்லையும், ஒரு முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்த இரண்டு பகுதிகளும் அதிக பாதிப்புகள் இருந்து வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்துக்கு வரும் நிலையில் இந்த வழியாக தான் செல்ல வேண்டும் அதனால் கிருஷ்னகிரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்படும் என பெரும் அச்சம் எழுந்து வந்தது.
ஆனால் அந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டது. மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இந்த காரணத்தால் கிருஷ்னகிரி மாவட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாளில் இருந்தே அந்த மாவட்டமானது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கிருஷ்ணகிரிக்கு வந்து சென்றுள்ளார். அதாவது அவரது மனைவி கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அதனால் அவரது மனைவி மற்றும் மருத்துவரின் தந்தை இந்த பகுதியில் தங்கி உள்ளார்கள்.
அதற்காக அந்த மருத்துவருக்கு அளிக்கப்பட விடுப்பு காலங்களை மனைவி மற்றும் தந்தையோடு செலவிடுவதற்காக கடந்த 24-ம் தேதி அந்த மருத்துவர் கிருஷ்னகிரி வந்து தங்கிவிட்டு நேற்று மீண்டும் அவர் விழுப்புரம் சென்றுள்ளார். விழுப்புரம் சென்ற அவர் சந்தேகத்தின் அடிப்படியில் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதனுடைய முடிவு இன்று வெளியானது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அவரது மனைவி, அவரின் தந்தை ஆகிய இருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல அவரது குடியிருப்புக்கு கீழ் வசிக்கக்கூடிய 9 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 11 பேருக்கும் தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் இன்று வெளியாகும்.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நேற்று முதல் கிருஷ்னகிரி நகரத்தை தனிமைப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கிய பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பகுதி முழுவதும் தற்போது கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
____