Why Donate Food ? | அன்னத்தை அளிப்பதால் ...

Why Donate Food ? | அன்னத்தை அளிப்பதால் ...

Vaidya

எந்தக் கிரணங்களால் ஆதித்யன் காய்கிறானோ, அதனால் மேகம் பெய்கிறது. மேக மழையால் செடி கொடிகளும், மரங்களும் உண்டாகின்றன. செடி கொடிகளின்றும் மரங்களின்றும் அன்னம் உண்டாகிறது.

அன்னதால் பிராணன்கள், பிராணன்களால் பலம்,

பலத்தால் தவம், தவத்தால் சிரத்தை,

சிரத்தையால் கூறிய புத்தி,

கூறிய புத்தியால் திடமான சங்கல்பம்,

திடமான சங்கல்பத்தால் மனதெளிவு,

மனதெளிவால் சாந்தி,

சாந்தியால் நிலையான சித்தம்,

நிலையான சித்தத்தால் உண்மை மறவாமை,

உண்மை மறவாமையால் அதையே இடைவிடாது நிலைத்திருத்தல்,

அப்படிப்பட்ட நினைவால் விஞ்ஞானம்,

விஞ்ஞானத்தால் ஆத்மாவை ஒருவன் உணர்ந்து அனுபவிக்கிறான். 

ஆகையால், அன்னத்தை அளிப்பதால் இவை அனைத்தையும் அளிக்கிறான்.

அன்னத்திலிருந்து பிராணிகளுக்கு பிராணன்கள் வளர்கின்றன;  பிரனண்களால் மனதும், மனதால் விஞ்ஞானமும், விஞ்ஞானத்தால் ஆனந்தமும், ஆதனால் உலகின் தோற்றுவாயாகிய பிரம்மமும் அடையபடுகிறது.

 - மஹாநாராயண உபநிஷத் - 79.15


www.feedingbharat.org

Report Page