Read

Read

Raghavan K

*பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா*

என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.

அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :


*1. எது இதமானது ?*

தர்மம்.


*2. நஞ்சு எது ?*

பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.


*3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?*

பற்றுதல்.


*4. கள்வர்கள் யார் ?*

புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.


*5. எதிரி யார் ?*

சோம்பல்.


*6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?*

இறப்புக்கு.


*7. குருடனை விட குருடன் யார் ?*

ஆசைகள் அதிகம் உள்ளவன்.


*8. சூரன் யார் ?*

கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.


*9.மதிப்புக்கு மூலம் எது ?*

எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.


*10. எது துக்கம் ?*

மன நிறைவு இல்லாமல் இருப்பது.


*11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?*

குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.


*12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?*

இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.


*13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?*

நல்லவர்கள்.


*14. எது சுகமானது ?*

அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.


*15. எது இன்பம் தரும் ?*

நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.


*16. எது மரணத்துக்கு இணையானது ?*

அசட்டுத்தனம்.


*17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?*

காலமறிந்து செய்யும் உதவி.


*18. இறக்கும் வரை உறுத்துவது எது ?*

ரகசியமாகச் செய்த பாவம்.


*19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?*

துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !


*20. சாது என்பவர் யார் ?*

ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.


*21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?*

சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.


*22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?*

எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.


*23. செவிடன் யார் ?*

நல்லதைக் 

கேட்காதவன்.


*24. ஊமை யார் ?*

சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான 

சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.


*25. நண்பன் யார் ?*

பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

 

*26. யாரை விபத்துகள் அணுகாது ?*

மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்

அன்புடன்" பகிரவும் "அனைவரும் உயர.

Report Page