Karma

Karma

Kumaran K

கலியுகமக்கள் பின்பற்ற வேண்டிய சித்தர் உபதேசங்கள்!!!


உலகம், காலம் என்ற சக்கர இயக்கத்தின் படி, சுழன்று கொண்டிருக்கின்றது; காலமோ நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன; 


அவை :

17,28,000 ஆண்டுகள் கொண்ட க்ருத யுகம்

12,96,000 ஆண்டுகள் கொண்ட திரோதா யுகம்

8,64,000 ஆண்டுகள் கொண்ட துவாபர யுகம்

4,32,000 ஆண்டுகள் கொண்ட கலியுகம்;


இதில் நாம் கலியுகாதி 5119 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;எதிர்கால விஞ்ஞானம் இந்த யுகக்கணக்கினை கண்டுபிடிக்கும்; அதன் பிறகு, தற்போது இருக்கும் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலண்டர் முறை அழிந்துவிடும்;


நாம் இன்றைய காலகட்டத்தில் பணம் அல்லது அரசியல் அதிகாரத்தினை அடைய ஓடிக் கொண்டிருக்கின்றோம்; நாம் வாழ்ந்து வரும் காலத்திலேயே கொடூரங்களும், துரோகங்களும், போலி ஆன்மீக தலைவர்களும் பொதுமக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆன்மீக நம்பிக்கையை சிதைத்து வருகின்றார்கள்; யார் உண்மையான ஆன்மீகவாதி? என்று கண்டுபிடிக்க முடியவில்லை;


வெகு சிலருக்கு மட்டுமே உண்மையான ஆன்மீக குரு கிடைத்து, அவரது வழிகாட்டுதலில் படி நிம்மதியான வாழ்க்கையையும், ஆன்மீக முன்னேற்றத்தையும் பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்;


ஒவ்வொரு மனிதனுக்கும் காரண குரு, காரிய குரு, வித்தை குரு, ஜன்மாந்திர குரு என்ற சத்குரு என்று நான்கு விதமான குருநாதர்கள் தேவை;

காரண குருவும், காரிய குருவும் சூட்சுமமாக நம்மை இயக்கிக் கொண்டு இருப்பார்கள்;


வித்தை குரு என்பது நாம் என்ன தொழில் செய்கின்றோமோ அதற்கு உரிய வாத்தியார் தான்; ஒவ்வொரு தொழிலையும் யாரும் சுயமாக கற்றுக்கொள்ள முடியாது; சைக்கிள் ஒட்டுவது முதல் மது பானம் தயாரிப்பது வரை; கோவிலில் பூஜை செய்வது முதல் வேறு உலகங்களுக்கு சூட்சும உடலுடன் பறந்து சென்று திரும்புவது வரை ஒவ்வொரு வித்தைக்கும் குருவாக இருப்பவரே வித்தை குரு;


இந்த மூன்று குருநாதர்களையும் அடையாளம் காண ஒரு சுலபமான வழியை அகத்திய மகரிஷியும், அவரது வம்சாவழியில் பிறந்த ஸ்ரீ இடியாப்ப சித்தரும் நமக்கு போதித்துள்ளார்கள்;

அதுதான் அண்ணாமலை கிரிவலம். . .


நமது இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் வந்துவிட்டால் நமது சத்குருவை நம்மால் நேரில் தரிசிக்க முடியும்; அவரை நேரில் சந்தித்து பேசியப் பின்னர், காரண குரு, காரிய குரு, வித்தைகுரு மூவரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும்;


1008 முறை அண்ணாமலை கிரிவலம் செல்வதற்கும் ஆத்ம பலம், பண வளம், தீவிரமான எண்ணம் மூன்றும் தேவை; இம்மூன்றையும் கிடைக்கச் செய்ய மிகவும் எளிமையானசில வழிமுறைகளை பின்பற்றி வந்தால் போதும்;


இங்கே தரப்பட்டிருக்கும் வழிமுறைகளை குறைந்தது 3 ஆண்டுகள் வரையிலும், அதிக பட்சம் 10 ஆண்டுகள் வரையிலும் விடாப்பிடியாக பின்பற்றி வந்தாலே உங்கள் கர்மவினைகள் தீர்ந்து, அண்ணாமலை கிரிவலம் செல்ல வாய்ப்புகள் தேடி வரும்;


1.தூங்கி எழுந்ததும்,இரு உள்ளங் கைகளையும் பார்த்தவாறு “ஓம் உத்தாதலக மகரிஷிக்கு ஜெய்” என்று 9 முறை ஜபிக்க வேண்டும்; இதனால்,ஈசனது அருள் கிட்டிவிடும்; மூத்த தேவி என்ற மூதேவியின் அனுக்கிரகமும் கிட்டும்;


மூதேவியின் அனுக்கிரகம் கிட்டினால், மூதேவியின் ஆட்சி நமது வசிப்பிடத்தை விட்டு போய்விடும்;


$குளிக்காமல் சாப்பிட்டால் மூதேவி ஆட்சி வரும்;


$வீட்டுக்குள் நுழைந்ததும் துர்நாற்றம் வீசினால் மூதேவி ஆட்சி வரும்;


$ தினமும் குளிக்கும்போது ஆடையில்லாமல் குளித்தால் மூதேவி ஆட்சி வரும்;


$ தினமும் குளிக்கும் போது உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தாமல் இருந்தால் மூதேவி ஆட்சி வரும்;


$ தினமும் தூங்கும் போது உள்ளாடை கூட அணியாமல் தூங்கினாலும் மூதேவி ஆட்சி வரும்;


$ தொடர்ந்து 3 நாட்களுக்கும் மேலாக ஒரே ஆடையை அணிந்தால் மூதேவி ஆட்சி வரும்;


$ தினமும் சுய இன்பம் செய்தால் மூதேவி ஆட்சி வரும்; இதில் முற்பிறவி சாபங்களும் காரணமாக இருந்திருக்கும்;


$ வீட்டில் பொருட்கள், புத்தகங்கள், ஆடைகள் அடுக்கி வைக்கப்படாமல் இருந்தால் மூதேவி ஆட்சி வரும்;


$ இங்கே விவரிக்க முடியாத சில அடாத செயல்களைச் செய்தாலும் மூதேவி ஆட்சி வரும்;


      ***************************


2.மேற்கு நோக்கி பல் துலக்க வேண்டும்; பாம்பு விரல் கொண்டு பல் துலக்க வேண்டும்; பிரஷ்ஷைப் பயன்படுத்தினாலும்,சில நிமிடங்கள் கண்டிப்பாக பாம்புவிரல் (விரல்களில் நீளமானது) கொண்டு பல் துலக்கியே ஆக வேண்டும்;


$ கிழக்கு அல்லது வேறு எந்த திசையை நோக்கி பல் துலக்கினாலும் சாபம் உண்டு; ஒரு பெரிய புராணக் கதையும் உண்டு;


     *********************


3.கிழக்கு நோக்கி சாப்பிட்டால் கல்வி வளரும்;.மேற்கு நோக்கி சாப்பிட்டால் செல்வம் பெருகும்;.வடக்கு நோக்கி சாப்பிட்டால் நோய் பெருகும்; தெற்கு நோக்கி சாப்பிட்டால் தேவையற்ற அவமானங்கள் வரும்; (ஒரு போதும் அழியாத புகழ் வராது)


$ இது நாம் வசிக்கும் வீட்டிற்கு மட்டுமே பொருந்தும்; உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளில் சாப்பிடும் போது மேற்கு நோக்கி சாப்பிட்டால

Report Page